பஸ்சுக்காக காத்திருந்தபோது வேன் மோதி கல்லூரி மாணவி சாவு

பஸ்சுக்காக காத்திருந்தபோது வேன் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஸ்சுக்காக காத்திருந்தபோது வேன் மோதி கல்லூரி மாணவி சாவு
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் திவ்யதர்ஷினி (வயது 22). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள ஆபீசர் காலனி சண்முகா நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை மாணவி திவ்யதர்ஷினி வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக தனது சித்தப்பாவுடன் கல்லூரி பஸ்சுக்காக சாலையோரம் காத்திருந்தார். அப்போது வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வண்டலூர் நோக்கி வேகமாக வந்த லோடு வேன், சாலையோரம் நின்று கொண்டிருந்த பிரியதர்ஷினி மற்றும் அவருடைய சித்தப்பா சந்திரமோகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பிரியதர்ஷினி மற்றும் சந்திரமோகன் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரியதர்ஷினி இறந்துவிட்டதாக கூறினர். சந்திரமோகன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார், பலியான திவ்யதர்ஷினி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com