

வத்திராயிருப்பு,
இந்தியாவின் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி பகுதியில் பள்ளிவாசல் தெரு, தைக்காதெரு, அன்சாரி தெரு, ரகுமத் நகர், கிழவன் கோவில் ஆகிய இடங்களில் 1500-க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில் கூமாப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் தங்களுடைய தெருக்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தெருக்கள் மற்றும் மெயின் வீதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனா.