சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கன்டெய்னர் லாரி 5 பேர் காயம்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, சிக்னலில் நின்றிருந்த வாகனங்களை இடித்து தள்ளியது. இதில் அரசு பஸ் உள்பட 8 வாகனங்கள் சேதம் அடைந்தது. 5 பேர் காயம் அடைந்தனர்.
சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கன்டெய்னர் லாரி 5 பேர் காயம்
Published on

பூந்தமல்லி,

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லியை அடுத்த திருமழிசை சிக்னலில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தன. அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலுக்காக சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களுக்கு இடையே புகுந்தது.

அங்கிருந்த வாகனங்களை இடித்து தள்ளியபடி தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, அரசு பஸ் மீது மோதி நின்றது. இதில் 6 கார்கள், 1 லோடு ஆட்டோ மற்றும் ஒரு அரசு பஸ் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்தன. கன்டெய்னர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com