மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 21-ந் தேதி ஏலம்- போலீஸ் சூப்பிரண்டு

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 21-ந் தேதி ஏலம்- போலீஸ் சூப்பிரண்டு
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் மது விலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் 42, மூன்று சக்கர வாகனங்கள் 12 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 31 என மொத்தம் 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 21-ந் தேதி காலை 10 மணி அளவில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகே ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முன் வைப்பு கட்டண தொகையாக இருசக்கர வாகனத்திற்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5 ஆயிரமும் செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இருசக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதத்தை உடனடியாக செலுத்திவிட வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவு சான்று (ஆர்.சி. புக்) ஆதார் அடடை கொண்டு வர வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் ஆதார் அட்டை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவரவேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டண தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com