கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்றார்.
கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
Published on

கிருஷ்ணகிரி,

முன்னதாக கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதே போல கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com