ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நோட்டீஸ் வழங்கியதால் பையூர் கிராம மக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஆரணி

ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நோட்டீஸ் வழங்கியதால் பையூர் கிராம மக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் ஏரிக்கரை பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 75-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுசம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்று திரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியிடம் கோரிக்கை மனு வழங்கினர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில் ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த 1,160 நபர்களுக்கும், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 1,055 நபர்களுக்கும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், ஆரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின் படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்த நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் அவர்கள் காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அவர்களுக்கு 6 நாட்கள் கெடு கொடுக்கப்பட்டு அப்போதும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது கோரிக்கை மனு கொடுத்தவர்களுக்கு வேறு இடம் காலியாக இருந்தால் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com