ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறேன் - விசுவ இந்து பரிஷத் மாநில பொதுச்செயலாளர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறேன் என்று விசுவ இந்து பரிஷத் மாநில பொதுச் செயலாளர் ஆர்.ஆர்.கோபால் கூறினார்.
ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறேன் - விசுவ இந்து பரிஷத் மாநில பொதுச்செயலாளர்
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகர பகுதிகளில் விசுவ இந்து பரிஷத் (தமிழ்நாடு) சார்பில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. அதை தொடர்ந்து காந்திநகரில் உள்ள திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர செயலாளர் முருகபாண்டி வரவேற்று பேசினார். இதில் மாநில இணை அமைப்பாளர் மனோஜ்குமார், மாநகர தலைவர் திருச்செல்வம், அமைப்பாளர் முத்துக்குமார் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விசுவ இந்து பரிஷத் (தமிழ்நாடு) மாநில பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.கோபால் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மாநில அரசும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுக்க முடியும். தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கூட இல்லாத நிலையில் அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது சமூக விரோதிகள் ஊடுருவல் என்ற ரஜினிகாந்தின் கருத்தை நான் வரவேற்கிறேன். கூடங்குளம் அணுமின் நிலையம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சினைகளின் போது நடைபெற்ற உச்சகட்ட போராட்டத்தின் போது என்ன நடந்ததோ அதுபோலவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடைசி கட்ட போராட்டத்திலும் நடைபெற்று விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com