பரமத்திவேலூர் அருகே வாய்க்காலில் குளித்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர் தண்ணீரில் மூழ்கி சாவு

பரமத்திவேலூர் அருகே வாய்க்காலில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்தார்.
பரமத்திவேலூர் அருகே வாய்க்காலில் குளித்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர் தண்ணீரில் மூழ்கி சாவு
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கொந்தளம் அருகே உள்ள கருத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள ராஜவாய்க்காலுக்கு சென்றார். இதையொட்டி மணி அங்கு படித்தரையில் நின்று குளித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர் வாய்க்கால் பகுதியில் தேடினர். அப்போது மணி பிணமாக கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இறந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com