

மைசூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் மந்திரியும், காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு தாவி தற்போது எம்.பி.யாகி இருப்பவருமான சீனிவாச பிரசாத், என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருகிறார். நான்(சித்தராமையா) தான் காங்கிரசை அழித்து வருகிறேன் என்று கிண்டலாக விமர்சித்து வருகிறார். சீனிவாச பிரசாத் என்னுடைய தலைமையிலான மந்திரிசபையில் தான் பதவி சுகத்தை அனுபவித்தார். மந்திரி பதவியை விட்டுக் கொடுக்கும்படி கேட்டதும் ஆவேசமடைந்து காங்கிரசை விட்டு விலகி, காங்கிரசாருக்கு துரோகம் செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். நஞ்சன்கூடு தொகுதியில் பா.ஜனதா சார்பில் சீனிவாச பிரசாத் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை தோற்கடித்தது யார் என்று அவருக்கு மறந்துவிட்டதா?.