

அதில், அவரது உறவினரான கவுசல்யா என்பவர் சிறுமியை திருவெறும்பூர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் கவுசல்யாவையும் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். புவனேஸ்வரிக்கும், கவுசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரியின் மகளை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து கவுசல்யா மற்றும் அவருக்கு உதவிய சிறுமியின் சித்தி தேவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.