வேலி தகராறில் மண்வெட்டியால் வெட்டியதில் காயமடைந்த விவசாயி சாவு - அண்ணணுக்கு வலைவீச்சு

வேலி தகராறில் மண்வெட்டியால் வெட்டியதில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலி தகராறில் மண்வெட்டியால் வெட்டியதில் காயமடைந்த விவசாயி சாவு - அண்ணணுக்கு வலைவீச்சு
Published on

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி அருகே வேலி தகராறில் மண்வெட்டியால் வெட்டியதில் காயமடைந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரை வெட்டிய அண்ணனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள லெக்னாம்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன்கள் குணசேகரன் (வயது 42), சண்முகம் (37). விவசாயிகள். இருவரும் குடும்பத்துடன் அருகருகே வசித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே வேலி வைப்பதில் தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி சண்முகத்தின் ஆடு குணசேகரனின் தோட்டத்திற்கு சென்று விட்டது.

இதனால் ஏற்பட்ட தகராறில் குணசேகரன், அவரது தம்பி சண்முகம் மற்றும் சண்முகத்தின் மனைவி மஞ்சுளா (35) ஆகியோரை மண்வெட்டியால் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த சண்முகம், மஞ்சுளா ஆகிய 2 பேரையும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சண்முகத்தை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குணசேகரனை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மன்னார்குடி போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி குணசேகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com