மத்திய தொழிலாளர்-வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில்
மத்திய தொழிலாளர்-வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

பெரம்பலூர்,

2017-18-ம் நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மத்திய தொழிலாளர் நல அமைப்பின் ஆணையர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக் கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் 2017-2018-ம் நிதி ஆண்டில், ரூ.250 முதல் ரூ.15 ஆயிரம் வரை, கல்வி உதவித்தொகை பெறு வதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 1.6.2017-ந் தேதி முதல் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

மின்னணு விண்ணப்பங்கள்

இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்கவேண்டும். கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் பங்களிப்பு, மிகவும் முக்கிய மானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு, மேற்குறிப்பிட்ட வலைதளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்த கட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.

கடைசி நாள்

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாளாக ஒன்று முதல் பத்து வகுப்புகள் வரை 30.9.2017-ந் தேதி வரையிலும், மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களுக்கு 31.10.2017-ந்தேதி வரையிலும் ஆகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com