டிக்டாக் செயலியால் விபரீதம், இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது

கோவையில் டிக்டாக் செயலி பயன்பாட்டால்வந்த தகராறில் இளம்பெண்ணை கத்தியால்குத்திக்கொன்றகணவரை போலீசார்கைது செய்தனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
டிக்டாக் செயலியால் விபரீதம், இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது
Published on

போத்தனூர்,

கோவையை அடுத்த அறிவொளிநகர் பகுதியைசேர்ந்தவர் கனகராஜ் (வயது 35),கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (28). இவர் கோவை அருகேஉள்ள தனியார்என்ஜினீயரிங் கல்லூரியில்ஊழியராக பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.குடும்பத்தகராறுகாரணமாக கனகராஜ்மற்றும் நந்தினிஆகியோர் கடந்த2ஆண்டுகளாக பிரிந்துவாழ்ந்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக நந்தினி செல்போனில்டிக்டாக்செயலிக்கு அடிமையாகி அதனை பயன்படுத்திஅதிகளவில்வீடியோக்களைபதிவேற்றம்செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கனகராஜ்செல்போனில்நந்தினியை தொடர்புகொண்டுடிக்டாக்செயலி வீடியோக்களைபதிவேற்றம்செய்ய வேண்டாம் என்றும், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறும்கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து பேச அவர் நந்தினியை செல்போனில்தொடர்பு கொள்ளமுயற்சி செய்தார். அப்போது நீண்ட நேரம்அழைப்பு பிசியாகஇருந்ததால் நேற்று மதியம் கனகராஜ் மது குடித்துவிட்டு, நந்தினிவேலை செய்யும்கல்லூரிக்கு சென்றுஅவருடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் தலை மற்றும் உடலில்சரமாரியாக குத்திஉள்ளார். இதில் படுகாயம் அடைந்தஅவரை சகஊழியர்கள்மீட்டு கோவைஅரசுஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம்குறித்து தகவல்அறிந்த மதுக்கரைசப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்கனகராஜை கைதுசெய்தனர்.

செல்போனில்டிக்டாக்செயலி பயன்படுத்தியதால் வந்த தகராறில் கணவனேமனைவியை கொலைசெய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com