மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
Published on

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாமியார்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. அவருடைய மகன் கிருஷ்ணகுமார் (வயது 18). இவர், அப்பகுதியில் உள்ள மைக்செட் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், ஒட்டன்சத்திரம் அருகே நாகணம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் மரத்தின் மீது சீரியல் பல்புகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில், கிருஷ்ணகுமார் வைத்திருந்த வயர் விழுந்தது. இதனால் மின்சாரம் பாய்ந்து கிருஷ்ணகுமார் தூக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com