செல்போன் பறித்த வாலிபர் கைது

செல்போன் பறித்த வாலிபர் கைது
செல்போன் பறித்த வாலிபர் கைது
Published on

கோவை

நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23). இவர் கோவையை அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 16-ந் தேதி இரவு சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி யுவராஜிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500-யை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த அபிவிஷ்ணு (23) என்பரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com