தூத்துக்குடியில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடியில் சிறுமியை கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி:

துத்துக்குடியை சேர்ந்த 19 வயது வாலிபர் கூலி வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கற்பழித்தாராம். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்தநிலையில் அவருக்கு குழந்தை பிறந்து உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com