

திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காரியாண்டி வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிமுத்துபாலன் (வயது 24) என்பவர் முகநூல் மூலம் பழகினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், போக்சோ சட்டப்பிரிவில் இசக்கிமுத்து பாலன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.