பழிக்குப்பழி வாங்க பயங்கரம்; விருதுநகரில் வாலிபர் வெட்டிக்கொலை

விருதுநகரில் நேற்று இரவு வாலிபர் கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழி வாங்க அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
பழிக்குப்பழி வாங்க பயங்கரம்; விருதுநகரில் வாலிபர் வெட்டிக்கொலை
Published on

விருதுநகர்,

விருதுநகரில் நேற்று இரவு நடந்த இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன்(வயது23). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கவுசிகா ஆற்றுப்பாலம் அருகே நிலாநகர் பகுதியில் அருண்பாண்டியன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கும்பல் அருண்பாண்டியனை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. பலத்த வெட்டுக்காயங்களுடன் அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனார். அவரை வெட்டிக்கொன்ற கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.சம்பவம் குறித்து அறிந்த பஜார் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அருண்பாண்டியன் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பழிக்குப்பழிவாங்க இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com