மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,969 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 968 ஆக உயர்ந்து உள்ளது.
Published on

புனே,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 268 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில், 9,971 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 287 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 6,642ல் இருந்து 6,929 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவாக உள்ளது.

மராட்டியத்தில் 82 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதேபோன்று மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,969 ஆக உயர்வடைந்து உள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.

மராட்டியத்தில் இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 390 ஆக உள்ளது. 42 ஆயிரத்து 609 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com