தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; ரூ.13.6 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இதுவரை ரூ.13.6 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்களில் பலர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 63 ஆயிரத்து 772 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6 லட்சத்து 14 ஆயிரத்து 61 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரத்து 838 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.13.6 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த ஏப்ரல் 16ந்தேதி முதல் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com