தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ஏரியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டேன். வாக்கு எண்ணிக்கையின்போது மையத்தில் இருந்து வெளியே சென்ற என்னை மீண்டும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. எனக்கு பதிவான வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. எனக்கு 185 வாக்குகள் பதிவானதாக மைக்கில் அறிவித்தனர். எனவே 4-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.