திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ‘லீப்’ ஆண்டில் பிறந்த 13 குழந்தைகள்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ‘லீப்’ ஆண்டில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன.
Published on

திண்டுக்கல்,

ஆங்கில மாதத்தில் பிப்ரவரியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்கள் வரும். இதனால் பிப்ரவரி மாதம் 29-ந்தேதி ஒரு அரிய நாளாக கருதப்படுகிறது. இது ஆங்கிலத்தில் லீப் ஆண்டு என குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறந்தநாள் கொண்டாட முடியும். மேலும் அவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக திகழ்வார்கள் என்று கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும் லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29-ந்தேதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று பல பிரபலங்கள் லீப்ஆண்டில் பிறந்துள்ளனர். இதனால் லீப் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தனிச்சிறப்பு கிடைக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிப்ரவரி மாதம் 29-ந்தேதி இந்த ஆண்டு (2020) நேற்று முன்தினம் அமைந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 13 கர்ப்பிணிகளுக்கு நேற்று முன்தினம் 13 குழந்தைகள் பிறந்தன. இதில் 9 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் அடங்கும். 13 குழந்தைகளில் 6 குழந்தைகள் அறுவை சிகிச்சை முறையிலும் மற்ற குழந்தைகள் சுகப்பிரசவமாகவும் பிறந்தன.

குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் உடல் ஆரோக்கியமுடன் உள்ளதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர். லீப் ஆண்டில் குழந்தைகள் பிறந்ததால் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com