ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on

பெரம்பூர்,

சென்னை அயனாவரத்தை சேர்ந்த முனீர்பாஷா, மண்ணடியை சேர்ந்த முகம்மது ஏஜாஸ் ஆகிய இருவரும் புளியந்தோப்பு ஆட்டுதொட்டியில் ஆட்டு இறைச்சி மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.61 லட்சத்து 50 ஆயிரத்தை திருடியதாக புளியந்தோப்பு போலீசார் சாலமன்(வயது 20), முகமது சபி (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

பின்னர் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சாலமனுக்கு கொரோனா அறிகுறி உறுதியானது. இதனால் கோர்ட்டு உத்தரவுப்படி முகமது சபி மட்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சாலமனை, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற கைதி சாலமன், அங்குள்ள ஜன்னல் வழியாக எகிறி குறித்து தப்பி ஓடிவிட்டார். கழிவறைக்கு சென்று நீண்டநேரம் ஆகியும் கைதி வெளியே வராததால் போலீசார், அங்கு சென் பார்த்தபோது, கைதி தப்பி ஓடிவிட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொரோனா பாதிக்கப்பட்ட கைதியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com