அன்னிய செலாவணி மோசடி வழக்கு; ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கு; ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதாகவும், அதில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் வதேராவை கைது செய்ய வேண்டுமென்றும், அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமலாக்க துறை கூறியிருந்தது. இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் கோரியிருந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com