நர்சிங் மாணவியை மானபங்கம் செய்ததாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

நர்சிங் மாணவியை மானபங்கம் செய்ததாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

மும்பை,

சந்திராப்பூர் மாவட்டம் ரஜூரா பகுதியில் நர்சிங் கல்லூரி நடத்தி வருபவர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுபாஷ் தோதே. அந்த கல்லூரியின் செயலாளராக இருப்பவர் அருண் தோதே. இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த கல்லூரியின் முதல்வர் அங்கு படித்து வரும் மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சுபாஷ் தோதே, அருண் தோதே ஆகிய இருவரும் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவியை கல்லூரி மற்றும் விடுதியில் இருந்து வெளி யேற்றினர். பின்னர் அவர் வேறு கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வும், கல்லூரி செயலாளரும் மாணவியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவி போலீசில் மானபங்க புகார் அளித்தார்.

அதன்பேரில் சுபாஷ் தோதே மற்றும் அருண் தோதே ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் பல்லர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com