அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்; ஜூன் 22 முதல் வினியோகம் செய்ய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்களை வரும் 22-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

சென்னை,

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதே சமயம், இந்த பாடப் புத்தகங்களை கிடங்குகளில் இருந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வரும் 22-ந் தேதி முதல் எடுத்துச் சென்று வினியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், வரும் 30-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க கேரியுள்ளார். தமிழகம் முழுவதும் மெத்தம் 2 கேடிக்கும் அதிகமான பாடப் புத்தகங்கள் வினியேகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com