இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழந்த மூதாட்டி பலி

திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தனம்(60), இவர் நேற்று முன்தினம் சிங்கனூரில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

மகனை பார்த்து விட்டு மீண்டும் முட்டியூர் செல்வதற்காக சிங்கனூர் ரோட்டில் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஏழுமலை மகன் ஜெயசீலன்(24), என்பவரின் இருசக்கர வாகனத்தில் தனம் உதவிகேட்டு ஏறி சென்றுகொண்டிருந்தார் இருசக்கர வாகனம்

பூதேரி ராஜன் நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் பாம்பு குறுக்கே சென்றுள்ளது.

இதனால் பதறிப்போன ஜெயசீலன் சடன் பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த தனம் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்தவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் பாண்டுரங்கன் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com