திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இரவு அவர் கீழ்பென்னாத்தூர் சென்றார். இரவு 10.05 மணிக்கு பிரசாரம் நடைபெறும் இடமான கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றதால் தேர்தல் விதிகளின் படி அவர் பேச முடியாமல் மக்களை நோக்கி கையால் சைகையை மட்டும் காண்பித்து விட்டு சென்றார்.
இதையடுத்து அவர் இரவு திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள விடுதியில் தங்கினார். தொடர்ந்து நேற்று காலை அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-