பிரியாவிடை நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்

அரியானாவில் ஓய்வு பெற்ற ஆசிரியரை அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் வீடு திரும்ப செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
பிரியாவிடை நாளில் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர்
Published on

அரியானாவில் குரே ராம் என்ற 60 வயது ஆசிரியர் நீம்கா என்ற அரசு பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார். அவர் ஓய்வு பெறும் நாளன்று ஹெலிகாப்டரில் வர வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். சொந்தமாக விவசாய நிலம் கூட இல்லாத அவரது குடும்பத்தினர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர்.

வெறும் இரண்டே கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளியில் இருந்து குரே ராம் தன் சொந்த ஊரான சத்புரா கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டார். தற்காலிக ஹெலிபேடு இருக்கும் இடத்தில் கூடிய கிராம மக்கள் அவரை மேள தாளங்களோடு உற்சாகமாக வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com