மறைமலைநகரில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; பிளம்பர் பலி

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிளம்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினி (வயது 35). பிளம்பராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 30). நண்பர்களான அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் முத்துராஜ் பலத்த காயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com