சென்னை,
சென்னை அடையாறு சாஸ்திரிநகர், 5-வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 37). வருமானவரித்துறை அதிகாரியான இவர், கடந்த பிப்ரவரி 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, திருச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பாக பாரதி கொடுத்த புகார் அடிப்படையில், சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிப்ரவரி 17-ந் தேதி அன்று, நீலாங்கரையில் வசிக்கும் அமெரிக்கர் கேரிசீவார்டு என்பவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் 4 பேர் புகுந்தனர். கேரிசீவார்டை கட்டிப்போட்டு விட்டு வீட்டுக்குள் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது அமெரிக்கர் கேரிசீவார்டுவின் மனைவியான அமெரிக்க பெண் டயானா, கொள்ளையர்களுக்கு தெரியாமல், நைசாக போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டார்.