

புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 21 கோடியே 80 லட்சத்து 51 ஆயிரத்து 890 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.
அடுத்த 3 நாளில் 40 ஆயிரத்து 650 தடுப்பூசிகள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வரையில் 19 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 577 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் தற்போது 1 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கைவசம் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.