

சென்னை,
நாடு முழுதும் எம். பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'நீட் நுழைவுத் நடக்கிறது. தேர்வு அடிப்படையில் நடப்பாண்டு நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு, கடந்த பிப்., 8ம் தேதி துவங்கி, மார்ச் 11ம் தேதி வரை நடந்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன்படி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 2024ம் ஆண்டு, 24.06 லட்சம் பேரும், 2025ம் ஆண்டு 22.76 லட்சம் பேரும் விண்ணப்பித்த நிலையில், தற்போது 26 லட்சமாக உயர்ந்துள்ளது.
2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடக்கிறது. துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 16 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளநிலையில், சில நாட்களில் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.