மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாட்ச்மேன் கைது

மும்பையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாட்ச்மேனை போலீசார் கைதுசெய்தனர்.
மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாட்ச்மேன் கைது
Published on

மும்பை,

தெற்கு மும்பையில் உள்ள டோங்ரியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 58 வயதான வாட்ச்மேன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்தபுதன்கிழமை பிற்பகல் 11 வயது சிறுமி டியூஷனுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமி தனியாக இருந்ததால், பாதுகாவலர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சிறுமியின் தாயார் டோங்ரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com