டெல்லி: தீ விபத்தில் தம்பதி பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (வயது 75) அவரது மனைவி ஆஷா (வயது 65) ஆகிய இருவர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த தம்பதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தம்பதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






