அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 24-ந் தேதி விசாரித்தது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம், ஆனால் எவ்வித முடிவையும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி அ.தி.மு.க. தலைவர்களில் ஒருவரான நத்தம் ஆர்.விஸ்வநாதன் சார்பில் வக்கீல் வினோத் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com