3 செ.மீ அரச இலையில் விஜய்யின் முகத்தை செதுக்கி வாழ்த்து தெரிவித்த பீகார் கலைஞர்

தமிழக முதலமைச்சரின் முகத்தை 5 மணி நேரத்தில் நுணுக்கமாக செதுக்கி, தனது கலை படைப்பின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 செ.மீ அரச இலையில் விஜய்யின் முகத்தை செதுக்கி வாழ்த்து தெரிவித்த பீகார் கலைஞர்
Published on

பாட்னா,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை சந்தித்தது.

பின்னர் எதிரணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்ததையடுத்து மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல்-அமைச்சாராக விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தின் முங்கேர் மாவட்டத்தை சேர்ந்த மணல் மற்றும் இலை ஓவிய கலைஞர் மதுரேந்திர குமார், 3 செ.மீ. அரச இலையில் விஜய்யின் முகத்தை 5 மணி நேரத்தில் நுணுக்கமாக செதுக்கி, தனது கலைப்படைப்பின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வட மாநில கலைஞர் ஒருவர் அரச இலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உருவத்தை உருவாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com