

டெல்லி,
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.