பாலியல் புகார் நிரூபணமான மூத்த விமானிக்கு மீண்டும் பணி

பாலியல் புகார் நிரூபணமான மூத்த விமானிக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.
பாலியல் புகார் நிரூபணமான மூத்த விமானிக்கு மீண்டும் பணி
Published on

புதுடெல்லி,

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் மூத்த விமானி சச்சின் குப்தா. இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற பெண் விமானிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாருக்கு உள்ளானார். அதை விசாரிக்க புகார் கமிட்டி அமைக்கப்பட்டது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சச்சின் குப்தா குற்றவாளி என்று புகார் கமிட்டி கண்டறிந்தது. அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் நிர்வாக இயக்குனரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே, மூத்த விமானி சச்சின் குப்தா மீண்டும் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com