தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பஸ், ரெயில் நிலையங்களில் பிரசாரம் - மத்திய ஜவுளித்துறை தகவல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பஸ், ரெயில் நிலையங்களில் பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய ஜவுளித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பஸ், ரெயில் நிலையங்களில் பிரசாரம் - மத்திய ஜவுளித்துறை தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் உதவி இயக்குனர் பூர்ணிமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தொடங்கி வைத்தார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி கிராம பஞ்சாயத்து, மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் திறந்தவெளி கழிப்பிட பழக்கம் இல்லாதவைகளாக அறிவித்தன. தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) வரை 'குப்பையில்லா இந்தியா' என்ற பிரசாரம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ், ரெயில் நிலையங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com