டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு

டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு
Published on

புதுடெல்லி,

ஜி-20 அமைப்புக்கு தலைமை தாங்கிய இந்தியா கடந்த மாதம் அதன் உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்தியது. இதனைத்தொடர்ந்து ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டுக்கு (பி20) ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி சபாநாயகர்கள் மாநாடு டெல்லியில் சமீபத்தில் நிறுவப்பட்ட யசோபூமியில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் நடக்கிறது.

இது 9-வது மாநாடு ஆகும். இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

"ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்துக்கான நாடாளுமன்றங்கள்" என்ற கருப்பொருளில் தொடங்கும் இந்த உச்சி மாநாட்டில் ஜி-20 உறுப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மட்டுமின்றி, சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் ஜி-20 அமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க ஒன்றியமும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறது.

காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தூதரக உறவில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்த மாநாட்டை கனடா சபாநாயகர் ரேமண்ட் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com