நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடங்கியது

நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடங்கியது
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இருகட்டங்களாக இன்று நடைபெறுகிறது. 72 நகரங்களில், 2,569 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிமற்றும் பகல் 2.30 மணி என்று இரு கட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றவும், ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் எடுத்துவரவும் யுபிஎஸ்சிஅறிவுறுத்தியுள்ளது. சானிடைசர்களை தேர்வர்கள் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com