காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் - டெல்லியில் நாளை நடக்கிறது

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் - டெல்லியில் நாளை நடக்கிறது
Published on

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு அவ்வப்போது கூடி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதித்து வருகிறது. இந்த வகையில் இதுவரை 14 கூட்டங்கள் நடைபெற்று உள்ளது.

இந்தநிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 15-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் 4 மாநில பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com