கேரள மந்திரி சபையில் மாற்றம்; 2 புதிய மந்திரிகள் பதவியேற்பு

புதிய மந்திரிகளுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கேரள மந்திரி சபையில் மாற்றம்; 2 புதிய மந்திரிகள் பதவியேற்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில், 5 ஆண்டுகள் மந்திரி சபையில் இரண்டரை ஆண்டுகள் ஒருவர் மந்திரியாகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொருவர் மந்திரியாகவும் இருப்பது என முடிவெடுத்தனர்.

இதன்படி காங்கிரஸ் எஸ் கட்சியின் மந்திரியாக அகமது தேவர்கோவில், காங்கிரஸ் பி கட்சி சார்பில் ஆண்டனி ராஜா ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றனர். இவர்கள் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 24-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில், ஏற்கனவே மேற்கொண்ட முடிவின்படி இருவரும் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் எஸ் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கடனப்பள்ளி, காங்கிரஸ் பி கட்சியைச் சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய இருவரும் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com