டெல்லி ஜேஎன்யூ பல்கலை. வனப்பகுதியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் - போலீசார் விசாரணை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வனப்பகுதியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜேஎன்யூ பல்கலை. வனப்பகுதியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் - போலீசார் விசாரணை
Published on

புதுடெல்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வனப்பகுதியில் மாணவர்கள் இருவர் நடந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அவர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மரத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலத்தை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்ததுடன், விசாரணைக்காக குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

உயிரிழந்தவர் 40-45 வயதுடையவர் என்று கூறிய போலீசார், யார் என்பது குறித்து இன்னும் அடையாளர் கானப்படவில்லை என்று தெரிவித்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், எவ்வாறு இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறும்போது, யமுனா விடுதிக்கு அருகிலுள்ள காட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாவும் , உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் தெரிவித்தனர்..  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com