டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியது

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியது
Published on

புதுடெல்லி,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

இந்தநிலையில், டெல்லியில் புதிதாக இன்று ஒரே நாளில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,943 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 17 உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை லியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 874 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 11,357 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 17,712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com