டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குற்றவாளி - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் குற்றவாளி என டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குற்றவாளி - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள துர்கா விகார் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சிங்(வயது 52) என்ற மருத்துவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த தற்கொலை குறிப்பின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், டெல்லி தியோலி தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வாலை குற்றவாளி என அறிவித்தார். பிரகாஷ் ஜார்வால் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்று நீதிபதி கூறினார். இந்த வழக்கின் தண்டனை தொடர்பான வாதங்கள் வரும் மார்ச் 13-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com