டெல்லியில் இன்று மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று ஒரே நாளில் மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,569 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 19 பேர் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,481 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 16,502 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,858 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 1,58,586 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com