டெல்லியில் புதிதாக 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் புதிதாக 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
Published on

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 735- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 795 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை . டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,221 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். டெல்லியில் தற்போது 2,442 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com