டெல்லி: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்; 2 பேர் பலி

டெல்லியில் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்; 2 பேர் பலி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கார் ஒன்றில் 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கிஷன் விகார் பகுதியை சேர்ந்தவர்கள். அந்த கார் ரோகிணி பகுதியில் சென்றபோது, செக்டார் 22 என்ற இடத்தில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த சஞ்சய் (வயது 23) மற்றும் அஷுதோஷ் (வயது 22) என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாஹில் (வயது 20), ரஷீத் (வயது 18) மற்றும் லோகேஷ் சிங் (வயது 23) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், உள்ளூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி 279, 304-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com